அடுத்த ஒரு மணி நேரத்தில் ... 3 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் உண்மையில் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறார்கள். சென்னையில் எல்லாம் இருசக்கர வாகனத்தில் தண்ணீர் அருந்தாமல் சென்றால், நிச்சயம் மயக்கமே வந்துவிடும். கால்களை சைலன்சர்களை விடவும் சுட்டுவிடும் அளவிற்கு வெயில் இருக்கிறது.

Rain likely in 3 districts for next 1 hour in tamil nadu says Chennai Meteorological Department

இந்த சூழலில் இன்று முதல் ஏப்.26 வரை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். அதோடு அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் வெயிலில் வெளியில் செல்வதை அடியோடு தவிர்ப்பது நல்லது.

கடும் வெயில் இருந்தாலும் மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என்றும், இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் சென்னைவானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதாவது தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சொன்னபடியே திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+