ரெட் அலர்ட் எச்சரிக்கை! சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு லீவு
சென்னை: டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று மாலை வரை விடவில்லை. இந்நிலையில் நாளை(டிச.2) ஒருநாள் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், இரு மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இன்று காலை கனமழை பெய்த போதிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாளையும் மழையின் தாக்கம் நீடிக்கும் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications