தீவிரமான ‛ரெமல்’ புயல்.. 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்! மீனவர்களே கடலுக்கு போகாதீங்க
சென்னை: வங்கக்கடலில் உருவான ‛ரெமல்' புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதோடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டசமாக கோடை மழை பெய்ய தொடங்கியது. Hஇதனால் வெயில் தணிந்தது.

அதோடு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தான் இன்று முதல் படிப்படியாக கோடை மழை குறைந்து மீண்டும் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு நடுவே தான் இன்று வங்கக்கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்க ‛ரெமல்' என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது புயலாக இன்று உருவானது. இந்த புயல் தீவிர புயலாக மாறி நாளை நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய தினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று இரவு 2வது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications