Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாத்துக்கும் ரெடி.. மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆக்சன்! அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கம் அளித்து உள்ளார்.

வங்கக் கடல் பகுதியில் உருவாகும் புயல் சின்னம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், இது தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

Safety and relief actions taken by Tamilnadu government due to cyclone and rain

அவர் கூறுகையில், "பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 29.11.2023 அன்று, நீர்த்தேக்கங்களில் நீர் மேலாண்மை செய்வது. 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும். பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது. பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருப்பது, மழை நீரை அகற்ற நீர் இறைப்பான்கள் மற்றும் தடையின்றி குடிநீர் வழங்க மின்னாக்கிகள் (Generators) வைத்திருப்பது. பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் மற்றும் பால் பவுடர் இருப்பு வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மீன் பிடிப்படகுகள் 29.11.2023-க்குள் கரைக்குத் திரும்புமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு கரையில் இருந்த 930 படகுகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன. கிழக்கு கரையில் இருந்த 57 படகுகள் கிருஷ்ணாம்பட்டினம், ஜூவாலதின் மற்றும் ராமய்யா பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 403 படகுகள் மேற்கு கரையில் பாதுகாப்பாக உள்ளன.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறும், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும். பொது மக்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கையும் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. நீர்வள ஆதாரத் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம், நெடுஞ்சாலைத் துறை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைள் குறித்து 29.11.2023 அன்று துறைத் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகாமல் மழை நீர் தேங்கி பயிர்கள் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள விவாசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முப்படையினை தயார் நிலையில் வைத்திட முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன. புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Safety and relief actions taken by Tamilnadu government due to cyclone and rain

29.11.2023 - செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 1,500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் 5.23 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள்.

30.11.2023 - செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம் குறுஞ்செய்திகள். 3.87 லட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை

30.11.2023 புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம் பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் 1.35 இலட்சம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. 1 நிவாரண முகாமில் 299 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 504 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+