G & J இடையே சிக்கிய சேலம்.. 3 மணி நேரம் வெளியே வராதீர்கள்.. கலெக்டர் அறிக்கை.. 108 டிகிரி வெயில்!
சேலம்: சேலத்தில் 108 டிகிரியை கடந்துள்ளது வெயிலின் தாக்கம். எனவே, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார். கீபோர்டில் G and J இடையே உள்ளது H. அதாவது heat, அதுதான் எங்களை வதைக்கிறது என்று ட்ரெண்டியோடு சொல்கிறார்கள் சேலம் மக்கள்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பம் அலை வீச கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரியை கடந்து நேற்றைய தினம்
108டிகிரி அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிக அளவில் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறு அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் இந்த வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அத்தியாவசியமும் தேவையும் இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications