அடிச்சு துவைக்கப்போகும் கனமழை! சென்னை ஏரிகளின் நிலவரம் என்ன?
சென்னை: சென்னை உட்பட வட தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. இந்நிலையில், கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் நீரை வெளியேற்றும் ஏரிகளின் நிலவரம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவங்கள், மழைப்பொழிவை கொடுக்கும். சமீபத்தில் முடிவடைந்த தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்தது. இருப்பினும் டெல்டா மாவட்டங்களிலும், வடமேற்கு மாவட்டங்களிலும் மழை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெய்யவில்லை. இப்படி இருக்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

அக்.1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தற்போது வரை 68% கூடுதலாக மழையை வழங்கியுள்ளது. இனி வரும் நாட்களிலும் மழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் வானிலை அறிவிப்பில், “இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது”
அதேநேரம் சென்னையின் பிரதான ஆறுகளாக உள்ள கூவம், கொசஸ்தலை மற்றும் அடையாறு ஆகிய ஆறுகளில் நீரை வெளியேற்றும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் எவ்வளவு என்கிற விவரம் வெளியாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் - 33%
புழல் - 62%
வீராணம் - 64%
சோழவரம் - 5%
பூண்டி - 9%
கண்ணன்கோட்டை- 60%
என்கிற அளவில் நீர் இருப்பு இருக்கிறது. சராசரியாக பார்த்தால் மொத்த ஏரிகளில் 36% நீர் இருப்பு இருக்கிறது. எனவே, மழை அறிவிப்பு குறித்து கவலையடைய வேண்டியதில்லை.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications