சக்கரம் சுத்தியாச்சு.. தமிழகத்தில் இன்று முதல் 7 நாளைக்கு அடிச்சு ஊத்தும் மழை.. வந்தாச்சு செம நியூஸ்
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், தென்மாவட்டங்களிலும் மழை பெய்து கொண்டேயிருக்கிறது.

வானிலை மையம்: நேற்றுகூட வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், வடதமிழக கடலோரப்பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது.
குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணித்து சொன்னது.
7 நாட்களுக்கு மழை: இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதுதான்:
இன்று அதாவது ஆகஸ்ட் 29 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை என ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.. மாதத்தின் இறுதி 2 நாட்களான, ஆகஸ்ட் 30, 31, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 1ம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும் மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications