பேய் மழை வெளுக்க போகுது! மப்பும் மந்தாரமுமாக மாறும் வானிலை! 8 ஊர்கள் ரொம்ப முக்கியம்! மெட் அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதே நேரத்தில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தில் மழை பெய்த நிலையில், மழை தொடங்க இருக்கும் மாதமான ஜூலை மாதத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை கனமழை பெய்தது.

இந்த நிலையில் தற்போது வானிலை அடியோடு மாறி இருக்கிறது. மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் பகல் மட்டுமல்லாமது இரவு நேரங்களில் கூட மக்கள் அசௌகரியமாக உணர்கின்றனர். கோடை வெயில் குறையும் என எதிர்பார்த்த நேரத்தில் திடீரென வெயில் அதிகரித்து இருப்பது மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
அதே நேரத்தில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ( 07.07.25) முதல் மூன்று நாட்களுக்கு ஒருசில இடங்களில் இயல்பைவிட 2-3° செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும். இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications