பிரதீப் என்ன சொல்றாருன்னா.. இன்றும் 3 மாவட்டங்களில் கனமழை கொட்டும்! வெதர்மேன் தந்த முக்கிய அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் முதல் விழுப்புரம் மாவட்டம் மாரக்காணம் வரை கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்து உள்ளது. நேற்று மரக்காணத்தில் 133 மில்லி மீட்டர் மழையும் இன்று 194 மில்லி மீட்டர் மழையும் சேர்ந்து மொத்தம் 327 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. செய்யூர் மற்றும் மதுராந்தகத்தில் முறையே 226 மில்லி மீட்டர், 220 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

இன்றைய நிலவரம்: மழை தற்போது தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு பகுதிகளுக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் தமிழ்நாடு முழுவதும் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும்.
கனமழை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைகளில் வழக்கமானது போல் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். ஆனால், கவலைப்படும் அளவுக்கு இருக்காது. இதை 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்துடன் ஒப்பிடக்கூடாது. இயற்கை ஒவ்வொரு முறை தரும் மழையை வைத்தும் பீதி அடைய வேண்டாம். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் பின்னர் இந்த மழை குறையலாம். வியாழக்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். வறண்ட வானிலையுடன் பொங்கல் கொண்டாடலாம்." என்றார்.
வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தென் தமிழ்நாட்டின் பல இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியிலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications