நாளை கவனமா இருங்க! சென்னை டூ புதுவை வரை! கொட்ட போகிறது மழை! வெதர்மேன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த புயலானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக மிக அதி கனமழையை கொடுக்கும் என்றும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். இது மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அதிகரிக்கும்.

weather rain

இந்த புயலானது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு முதல் புதுவை வரை உள்ள பகுதிகளில் மிக மிக அதி கனமழையை கொடுக்க போகிறது. அதிகபட்ச எச்சரிக்கையுடன் நாளை மழை நிலவரத்தை கண்காணிக்க வேண்டியது அவசியம்.

கனமழை நீடித்தால் இது ஞாயிற்றுக்கிழமையும் தொடரும். புதுவை முதல் சென்னை வரை நாளை அளவுக்கு அதிகமான மழையை கொட்ட போகிறது. எனவே கவனமாக இருங்கள். நேற்று இரவு ஒரு சிறிய மேகக் கூட்டம் 50 முதல் 60 செ.மீ. மழையை கொடுத்ததை மறக்க வேண்டாம். இவ்வாறு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தற்போது நாகப்பட்டினத்தின் கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென் கிழக்க 360 கி.மீ தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகம் புதுவை இடையே அதாவது காரைக்கால்- மகாபலிபுரம் இடையே நாளை (நவ.30) பிற்பகல் புயலாகவே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் கரையை கடக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக மாற போகிறது. இதனால் செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் இன்று சென்னைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+