"நாளை காலை 9 மணி வரை.." புது அலர்ட் தரும் வெதர்மேன்.. எச்சரிக்கையா இருங்க மக்களே.. என்ன மேட்டர்
சென்னை: கடுமையான பனிமூட்டம் காரணமாகக் காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
பொதுவாக ஜன. மாதங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனி மூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்தாண்டும் கூட அதற்கு விதிவிலக்கு இல்லை. பல பகுதிகளில் இன்று காலை கூட கடுமையான பனி மூட்டம் நிலவியது.

இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கவே சிரமப்பட்டனர். சில மீட்டருக்கு அப்பால் செல்லும் வாகனங்கள் கூட தெளிவாகத் தெரியாத ஒரு சூழலே நிலவியது. அடுத்த சில நாட்களுக்கும் இந்த பனி மூட்டம் இருக்கும் என்றே தெரிகிறது.
போகி பண்டிகை: இன்று போகி கொண்டாடப்படும் நிலையில், இதன் காரணமாகவும் புகை கிளம்புகிறது. இதுவும் கூட பார்வை திறனைக் கடுமையாகப் பாதிக்கிறது. சென்னை விமான நிலைய சாலையைக் காலை புகை மூட்டம் சூழ்ந்தது. அதிகாலை முதலே பனி மூட்டமும் நிலவி வருவதால் விமானச் சேவை சிறிது பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "சென்னை மற்றும் வட தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் வரை மூடுபனி நிலவுவதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. நாளை மற்றும் அடுத்த இரண்டு நாட்களில் பனிமூட்டம் காரணமாகச் சாலையில் வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாது.. இன்று போகி கொண்டாடப்படுவது கூடுதல் காரணமாக அமையும்.
என்ன காரணம்: காலை 9.00 மணிக்குப் பின்னரே சாலைகள் தெளிவாகத் தெரியும்.. பகல் நேரத்தில் காற்று வீசாது என்பதால் காலை சில மணி நேரங்கள் வரை மூடுபனி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை இல்லாத நிலையில், காற்று எங்கும் வீசுவதில்லை. நம் மேல் உள்ள உயர் அழுத்தப் பகுதி மேலிருந்து காற்றைத் தள்ளுகிறது.

எவ்வளவு நாட்கள்: அடுத்த 3 நாட்களில் இரவு வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் வாகனங்களைப் பாதுகாப்பாக டிரைவ் செய்யுங்கள்.. அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் விடுமுறை தின வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் போகி பண்டிகையில் டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை பொது இடங்களில் எரிப்பதைத் தவிர்த்து விடுமாறும் விமானச் சேவைகள் பாதிக்காமல் இருக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பைக் கொடுக்குமாறும் சென்னை ஏர்போர்ட் சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று போகி கொண்டாடப்படும் நிலையில், நாளை காலை தான் அதன் பாதிப்பு நமக்குத் தெரிய வரும்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications