அடுத்த 2 நாட்களில் பெரிய சம்பவம்.. இடி மின்னலுடன் கொட்ட போகுது மழை.. சற்று முன் வந்த பரபர அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே இருந்த வந்த நிலையில், அடுத்த இரு நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த முறை வடகிழக்கு பருவமழை நமக்கு நல்ல மழையைக் கொடுத்தது. குறிப்பாக டிசம்பர் மாதம் முதல் வாரம் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கனமழை வைத்துச் செய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சென்னைக்கு அடுத்து டிச. கடைசியில் தென்தமிழக மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக இருந்தது.
வானிலை மையம்: ஆனால், அதன் பிறகு மழை பெரியளவில் இல்லை.. மாறாக உறை பனி தான் அதிகமாக இருந்தது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் பல பகுதிகளில் உறை பனி அதிகமாகவே இருந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பரவலாக அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் செய்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தினசரி செய்திக்குறிப்பில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஜன.19) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை (ஜன. 20) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் ஜன. 21 முதல் ஜன.25 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: இன்று ஜன.19 மற்றும் ஜன.20 ஆகிய நாட்களில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 10 செமி மழை பெய்துள்ளது. மேலும், தற்போது மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சில வாரங்கள் கழித்து தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் அடுத்த இரு நாட்கள் வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
காற்றழுத்த தாழ்வு பாதை.. இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு! -
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications