சொதசொதவென மிரட்டும் மழை.. 'ரெட் அலர்ட்.. பள்ளி கல்லூரிகளுக்கு தெலங்கானாவில் விடுமுறை அறிவிப்பு
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இன்று 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்கள் பருவமழை காரணமாக அதிகமான மழை பொழிவை பெற்றிருக்கின்றன. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மாநிலங்களில் மழை அதிகமாக பெய்து வருகிறது.

தெலங்கானா மாநிலத்தை பொறுத்த அளவில், கரீம்நகர், பெத்தப்பள்ளி, நல்கொண்டா, கம்மம், சூர்யாபேட்டை, மஹபூபாபாத், விகாராபாத் மற்றும் வாரங்கல் என 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறையை கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஹைதராபாத் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள வேல்பூர் மண்டலத்தில் 46 சென்டிமீட்டர் மழை பெய்ததால் இங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதில் இரண்டு ஏரிகள் உடைந்துள்ளதால் வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஹைதராபாத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மூன்று கட்டமாக வீட்டிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஐடி நிறுவனங்கள் மதியம் 3 மணிக்குள் தங்கள் ஊழியர்களை விடுவிக்குமாறும், IKEA மற்றும் பல்லுயிர் சந்திப்பு மற்றும் ராய்துர்கம் பகுதியைச் சுற்றியுள்ள நிறுவனங்கள் மாலை 4.30 மணிக்கு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் எனவும், கச்சிபௌலியில் அமைந்துள்ள நிறுவனங்கள் 6 மணிக்கு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் டிராபிக் ஓரளவு குறையலாம்.
மேலும் தற்போது வரை சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இரண்டு பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications