இன்று 9 இடங்களில் சதமடித்த வெயில்! எங்கே அதிகம்! சென்னையில் எவ்வளவு? "முடியல.." கதறும் மக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும் கூட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. அதீத வெப்பம் மக்களைப் படாய் படுத்தி வருகிறது. இன்றும் கூட மாநிலத்தில் 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சம் எங்கே வெப்பம் அதிகம்.. சென்னையில் எவ்வளவு வெப்பம் பதிவானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் என்பதால் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து கொஞ்சம் வெப்பம் குறைந்தாலும் கூட பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருக்கிறது.

9 இடங்களில் வெப்பம் சதம்
இன்றைய தினம் தமிழ்நாட்டில் 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், திருவண்ணாமலை மற்றும் வேலூரில் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. அதேபோல மதுரை நகரம், கரூப் பரமத்தியில் வெப்பம் 103 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.
சென்னையில் எவ்வளவு
மேலும், ஈரோடு, திருச்சி மற்றும் திருத்தணியில் தலா 102 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது. அதேபோல சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதமே இந்தளவுக்கு வெப்பம் உச்சத்தைத் தொடும் நிலையில், அடுத்த மாதம் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.
வெதர்மேன்
தமிழகத்தில் நிலவும் வெப்பம் தொடர்பாக வெதர்மேன் தனது ட்வீட்டில், "சென்னையின் உட்புறப் பகுதிகள் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கிறது. வேலூரில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. நாளை ஈரோடு, கரூர், மதுரை மற்றும் வேலூர் ஆகிய இடங்களிலும் வெப்பம் அதிகரிக்கும். உள்மாவட்ட வெப்பத்தையும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய கடலோரப் பகுதிகளின் வெப்பத்தையும் ஒப்பிட முடியாது. ஏனெனில் அதிக ஈரப்பதம் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தை விட நாம் உணரும் வெப்பம் அதிகம் போல இருக்கும்" எனப் பதிவிட்டு இருக்கிறார்.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெப்பம் குறித்து தனது தினசரி செய்திக்குறிப்பில், "அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கைப் பொறுத்த வரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். ஏப்ரல் 22 முதல் 24 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்
இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை இன்று முதல் ஏப்ரல் 24 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இது மட்டுமின்றி இன்று முதல் ஏப்ரல் 22 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications