9 மாவட்டங்கள் குறி.. சென்னையும் இருக்கு.. இடியோடு மதியம் 1 மணி வரை வெளுக்கப்போகும் மழை.. ‛அலர்ட்’
சென்னை: தமிழகத்தில் இன்று மதியம் 1 மணிவரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே தான் டிசம்பர் 3ம் தேதி புதிதாக புயல் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 3ம் தேதி புயலாக மாற உள்ளது.
இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. சென்னைக்கு 800 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை நோக்கி வரும்போது கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. புயல் பாதிக்கும் மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் புயலுக்கு முன்பாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்றும், நேற்று முன்தினமும் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் தான் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம். போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*******
-
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications