Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துநகர், நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் போறீங்களா? இதுக்கு மேல போகமுடியாது! ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை காரணமாக சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, குமரி செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

Trains from Chennai to Nellai partially canceled due to heavy rains and floods

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு பெருமழையாகும்.

Trains from Chennai to Nellai partially canceled due to heavy rains and floods

4 மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த 4 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களும் இன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரயில் சேவையை பொறுத்த அளவில், சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில், நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில், திருச்நெந்தூர் - பாலக்காடு, நெல்லையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ரயில், கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் விரைவு ரயில் சேவை போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையிலிருந்து நெல்லை, குமரி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது, சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் வண்டி எண்: 12693 முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று மதுரை வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல எழும்பூரிலிருந்து இன்று இரவு 8.10 மணிக்கு நெல்லை செல்லும் வ.எண்: 12631 நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரைவரை மட்டுமே செல்லும்.

எழும்பூரிலிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்படும் சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மதுரை வரை மட்டும் செல்லும். மேலும் சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இன்று இரவு 11 மணிக்கு தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் புறப்படும் ரயில் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+