நாகர்கோவில் அருகே சுனாமி போல ஊருக்குள் வந்த ராட்சச அலைகள்.. பைக்கில் போனவரை இழுத்ததால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகர்கோவில் அருகே கடல் சீற்றம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திடீரென ஊருக்குள் சுனாமி போல் பாய்ந்த கடல் நீரால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். வாகனங்கள் அலையில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்து உள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலிமை பெற்றது. இந்த மண்டலம், 14 கிமீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது.

tamilnadu weatherman summer weather news

இன்று அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடந்தது. கரையை கடந்த நிலையில் இதன் வலிமை குறைந்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் இதே திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் நாகர்கோவில் அருகே கடல் சீற்றம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திடீரென ஊருக்குள் சுனாமி போல் பாய்ந்த கடல் நீரால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். திடீரென கடல் நீர் உள்ளே வந்துள்ளது.

,கரை ஓரம் இருக்கும் வீடுகளுக்கு உள்ளே கடல் நீர் சென்றுள்ளது. வாகனங்கள் அலையில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆரம்ப கட்ட சுனாமி போல இது ஏற்பட்டுள்ளது. அருகே எங்கேயும் நிலநடுக்கம் பதிவாகவில்லை. அதேபோல் எங்கேயும்.. சுனாமி ஏற்படவில்லை. அப்படி இருக்க அலை ஆக்ரோஷமாக இருந்தது ஏன் என்று தெரியவில்லை.

வானிலை எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்:

17.10.2024 முதல் 18.10.2024 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடு ம்.

19.10.2024 மற்றும் 20.10.2024 : வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

17.10.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.10.2024: ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.10.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.10.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+