செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு!
வேலூர்: தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இன்று வேலூரில் 102 டிகிரி வெயில் பதிவாகியிருக்கிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச்.9ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
10ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
11ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
12ம் தேதி மற்றும் 13ம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று வேலூரில் 102 டிகிரி வெயில் பதிவாகியிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
- வேலூர் - 103.3
- மதுரை விமான நிலையம் - 101.3
- கரூர் பரமத்தி - 100.8
- திருச்சிராப்பள்ளி-100.6
- ஈரோடு-100.4
- மதுரை நகரம்-99.3
- சேலம்-99.0
- தர்மபுரி-98.6
- திருப்பத்தூர்-98.4
- திருத்தணி-96.8
- தஞ்சாவூர்-96.8
- கோயம்புத்தூர்-96.3
- பாளையங்கோட்டை-95.9
- சென்னை (மீனம்பாக்கம்)-94.8
- தொண்டி-92.8
- கன்னியாகுமரி-92.3
- தூத்துக்குடி-91.9
- பாம்பன்-91.9
- கடலூர்-90.7
- சென்னை (நுங்கம்பாக்கம்)-90.5
- அதிராமப்பட்டினம்-90.5
- புதுச்சேரி-90.5
- நாகப்பட்டினம்-90.0
- பரங்கிப்பேட்டை-89.2
- காரைக்கால்-88.9
- வால்பாறை -82.4
- குன்னூர்-76.1
- உதகமண்டலம் -72.3
- கொடைக்கானல்-70.5
என வெயில் பதிவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications