Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம்..." வானிலை மையம் சொன்ன மிக முக்கிய தகவல்.. ஆஹா முக்கியமாச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை இல்லை. மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்கிறது. குளிர்ச்சியான கிளைமேட் மட்டுமே நிலவி வருகிறது. இதற்கிடையே மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.!

தமிழ்நாட்டில் பருவமழை சீசன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம். மாநிலத்தில் பெரும்பாலும் எந்தவொரு இடத்திலும் மழை இல்லை. குளிர் மட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வரும் நாட்களிலும் இதை கிளைமேட் தான் தொடரும் எனத் தெரிகிறது. வானிலை மையமும் தனது செய்திக்குறிப்பில் மழை குறையும் என்றே கூறியிருக்கிறது.

rain winter

வானிலை மையம்

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை நாளை (10-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழகக் கடலோரப்பகுதிகளில் இன்று (10-12-2025) தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 11, 12 தேதிகளில் தென்தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

செல்ல வேண்டாம்

வங்கக்கடல் பகுதிகளில் இன்று (10-12-2025) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் இன்று எச்சரிக்கை எதுவும் இல்லை. நாளைய தினம் குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+