பேய் மழை.. இதுதாங்க அது! அடுத்த 2 மணி நேரம் உஷார்! 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்
சென்னை: பொங்கல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருச்சிக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?
மிதமானது முதல் கனமழை பெய்யும் போது இந்த அலர்ட் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் 6-12 செ.மீ வரை மழை பெய்யும் என்கிற நிலை இருக்கும்போது, மஞ்சள் அலர்ட் கொடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 12-20 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்போது ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்படுகிறது. ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டால், கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அர்த்தம்.












Click it and Unblock the Notifications