சும்மா அதிருச்சுல்ல! டமால் டுமீல் மழைக்கு என்ன காரணம்? புல் எஃபெக்ட்னா சும்மாவா? வெதர்மேன் விளக்கம்
சென்னை: சென்னையில் இன்று காலை திடீரென ஏன் இடியுடன் கூடிய மழை பெய்தது என்பதை வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவம்பர் மாதம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது.

அது போல் சென்னையிலும் பல நாட்கள் கனமழை வெளுத்து வாங்கியது. தீபாவளி பண்டிகைக்கு பிறகெல்லாம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் நீர் நிலைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கடந்த இரு தினங்களாக வெயில் அடித்தது. நேற்று முன் தினம் லேசான வெயில் வந்தது. அடுத்து நேற்று காலை முதலே வெயில் அடிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் திடீரென இரவு முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் கனழை பெய்தது.
அதிகாலை வரை இடி, மின்னலுடன் இந்த மழை நீடித்தது. இதனால் இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மழைக்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட தொடர் பதிவுகளில் இந்த டமால் டுமீல் இடி சும்மா அதிருதுல்ல!
செம மழை. அடையாறில் 73 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது மழையை கொடுக்கும் மேகக் கூட்டங்களால் பெய்த மழைன்னா சும்மா வா. சென்னையில் திடீரென வெயில் வரும். மழை பெய்யும். கடலில் சில மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளன. இவையும் மழையை தரும். ஆனால் வெயில் வரும். மழை குறையும். அண்ணாநகர்- நுங்கம்பாக்கம் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அவர் போட்ட பதிவில், இன்று (நேற்று) சற்று டல்லான நாள்தான். தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை வரும். திடீரென சூரியன் வரும், உடனே மழை பெய்யும். இதுதான் நேற்றைய பேட்டர்னாக இருந்தது. ஆனால் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications