சென்னையை விட்டுருங்க.. தமிழ்நாட்டில் இனி இங்கதான் மழை பெய்ய போகுது.. தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை நோக்கி அடுத்த 2 வாரங்களுக்கு எந்த புயலும் வரவில்லை. சென்னையில் இனி 20 - 24 ஆம் தேதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யலாம். எனினும் இதை உறுதி செய்ய அதிக காலம் உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் வங்கக்கடலில் கடந்த 26 ஆம் தேதி உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் பேய் மழை பெய்தது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.

 Western districts to receive heavy rain for next two days: Tamil Nadu Weatherman

அதன்பின் இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது. இந்த மழையால் கனமழை கொட்டி பெரும் பாதிப்பை சென்னை சந்தித்துள்ளது. தற்போது சென்னையில் மழை விட்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் ஒரு புயல் தாக்கக் கூடும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

பிரதீப் ஜான் ட்வீட்: இந்த நிலையில், ஒவ்வொரு முறையும் மழை குறித்து அப்டேட் செய்யும் போதேல்லாம் மக்களுக்கு கொஞ்சம் பீதி ஏற்படுகிறது. சென்னையை நோக்கி அடுத்த 2 வாரங்களுக்கு எந்த புயலும் வரவில்லை என்றும் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை வானிலை குறித்த அப்டேட்டில் இருந்து விலகி செல்ல வேண்டிய நேரம் இது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நட்களுக்கு ஆங்காங்கே சிறிது மழை பெய்யலாம். எனினும், இது குறித்து அப்டேட் இருக்காது. ஒவ்வொரு முறையும் மழை குறித்து அப்டேட் செய்யும் போதேல்லாம் மக்களுக்கு கொஞ்சம் பீதி ஏற்படுகிறது.

அடுத்த 2 வாரங்களுக்கு: சென்னையை நோக்கி அடுத்த 2 வாரங்களுக்கு எந்த புயலும் வரவில்லை. சென்னையில் இனி 20-24 ஆம் தேதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யலாம். எனினும் இதை உறுதி செய்ய அதிக காலம் உள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (LoPAR) மேற்கு மாவட்டங்களில் மழையை கொண்டு வரும்.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர், கரூர், டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும். கேரள எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்.

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல், ஈரோடு, கோவை & திருப்பூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவிலும் நல்ல மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை செல்ல வாய்ப்புள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+