நிவாரணத்தை விடுங்க! வேறு முக்கிய மேட்டர் இருக்கு.. ஸ்டாலின் அறிவிப்பு! பள்ளி மாணவர்களுக்கு முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள பள்ளி மாணவர்கள் மனது குளிரும் விதமாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

When will Tamil Nadu government give the new school books and notes for Flood affected students?

ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளம் வடியாத பகுதிகள்: கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.

மீளும் சென்னை: மேலும் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.

இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள பள்ளி மாணவர்கள் மனது குளிரும் விதமாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

When will Tamil Nadu government give the new school books and notes for Flood affected students?

மழை, வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு நாளை (டிச.12) முதல் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு இலவசமாக பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த இடங்களில் ₹6,000 நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் விநியோகிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் பள்ளிகள் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+