சென்னை உட்பட 22 மாவட்டங்கள்.. இரவில் இடி மின்னலுடன் பொளக்க போகுது மழை.. வானிலை மையம் தந்த அலர்ட்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடிமின்னலுடன் கூடிய மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகவே ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. அக். மாதம் இயல்பைக் காட்டிலும் 43% மழை குறைவாகப் பெய்துள்ள நிலையில், இப்போது பெய்யும் மழை சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது.

இதனால் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது.
22 மாவட்டங்களில் மழை: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 10 மணி வரை மாநிலத்தில் 22 மாவட்டங்களில் மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 22 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இங்கே இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த கவலைகளைப் பகிர்ந்திருந்தன. அதில் "தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் வானிலை: நவ. 1 மற்றும் நவ.2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 3ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications