செப்டம்பரில் அசால்ட் செய்யும் வெயில்! காரணம் இதுதான்.. மத்திய அரசு விஞ்ஞானி விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்துள்ள நிலையில், வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இப்படி இருக்கையில், மறுபுறம் வெயில் கொளுத்தி வருகிறது. இதற்கான காரணம் குறித்து மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழையானது நாட்டின் 70% நிலப்பரப்புக்கு தேவையான மழையை கொடுக்கும். இது செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும். இருப்பினும், செப்டம்பரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது. காரணம் மேகங்களின் திரள்தான். ஆனால், இந்த முறை தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இன்று மட்டும் 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

இப்படி இருக்கையில் இந்த அதீத வெயிலுக்கான காரணம் குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "செப்டம்பரில் தமிழ்நாட்டில் மழை இருக்காது. ஆனால் வங்கக்கடலிலிருந்து மேகங்கள் உருவாகி, அது தமிழ்நாட்டின் மீது நிலை காண்டிருக்கும். இந்த மேகங்கள் சூரிய ஒளியை பிரதிபலித்து வெப்பத்திலிருந்து பூமியை காக்கும். ஆனால் இந்த முறை இப்படி மேகங்கள் அதிக அளவில் உருவாகவில்லை. வட மாநிலங்களிலும் வறண்ட காலநிலை நிலவி வருகிறது. எனவே, வெப்பம் அதிகரித்திருக்கிறது.
இரண்டாவது காரணம் சூரியன். அதாவது சூரியன் மிகச்சரியாக கிழக்கில் உதிக்காது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது, சூரியன் வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு நோக்கியும், தென்கிழக்கிலிருந்து வடகிழக்கு நோக்கியும் நகரும். இதனால் சூரிய உதயம் மிகச்சரியாக கிழக்கில் அமையாது. அதிகபட்ச வடகிழக்கில் சூரியன் உதித்தால் அதை 'கடக சங்கராந்தி' என்று கூறுவார்கள். இதுவே அதிகபட்ச தென்கிழக்கு எனில் 'மகர சங்கராந்தி' என்று கூறுவார்கள்.
இப்போது சூரியன் வடகிழக்கிலிருந்து தென் கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டின் தலைக்கு மேலே சூரியன் இருக்கிறது. இதுவும், போதுமான மேகங்கள் இல்லாததும் சேர்ந்து அதிகபட்ச வெப்பநிலையை உருவாக்கியுள்ளன.
மேற்குறிப்பிட்ட இரண்டு சங்கராந்திக்கு நடுவில் உள்ள பகுதியை, 'இலையுதிற் சம இரவு புள்ளி' என்றும் 'இளவேனிற் சம இரவு புள்ளி' என்றும் குறிப்பிடுகிறார்கள். இதில் 'இளவேனிற் சம இரவு புள்ளி' செப்டம்பர் மாதத்தில்தான் வருகிறது. இந்த மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் நிழல் இல்லா நாளாக இருக்கும். அப்படியெனில் சூரிய கதிர்கள் செங்குத்தாக நிலப்பரப்பின் மீது விழுகின்றன. இதனால்தான் வெயில் அதிகமாக இருக்கிறது.
செப்டம்பரில் வெயில் அதிகமாக இருப்பது, இப்போது நடப்பது கிடையாது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாதத்தில் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications