எந்த புயல் காலத்திலும் இல்லாத வித்தியாசம்.. "விஐபிகள்" வசிக்கும் மயிலாப்பூர் தவிப்பு!
சென்னை: 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் போது கூட மயிலாப்பூரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரே நாளில் மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டது. இப்போது மழை நின்று 3 நாட்களை கடந்த பின்னரும் 80 சதவிகிதம் பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மயிலாப்பூர்வாசிகள் கலக்கமடைந்துள்ளனர்.
சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான பகுதியாக உள்ளது மயிலாப்பூர். அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்களும் வசித்து வருகின்றனர். ஆலயங்கள் அதிகம் நிறைந்த பகுதி. எப்போதும் ஏதாவது ஒரு கோவிலில் திருவிழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

பாஜக சீனியர் சுப்ரமணியசுவாமி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நடிகை கீர்த்தி பாண்டியன் உள்பட பல விஐபிக்கள் வசிக்கும் பகுதி மயிலாப்பூர். முதல்வர், அமைச்சர்கள் செல்லும் காமராஜர் சாலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. அருகிலேயே ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி உள்ளிட்ட பகுதிகளும் உள்ளதால் விஐபி ஏரியாவாக திகழ்கிறது மயிலாப்பூர்.
சென்னையில் ஞாயிறுக்கிழமை இரவு தொடங்கி திங்கட்கிழமை இரவு வரை பெய்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதன் சுவடு கூட தெரியாத மயிலாப்பூரில் இந்த ஆண்டு வெள்ளம் தேங்கியது. வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளது. இது கள நிலவரம். இதைத்தாண்டி இதே கருத்தை பலரும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார்கள்.
ஞாயிறுக்கிழமை இரவு நிறுத்தப்பட்ட மின்சாரம் பல பகுதிகளில் இன்னமும் தரப்படவில்லை. மழை நின்று நான்கு நாட்கள் ஆன பின்னரும் மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் மக்கள் கொதிப்படைந்தனர். மின்சாரம் வழங்க வலியுறுத்தி ஏராளமானோர் மயிலாப்பூரில் கைகளில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Yes mylapore is sinking, I am stuck in the area as well without power water or adequate food.
— Keerthi Pandian (@iKeerthiPandian) December 4, 2023
But there are people in worse conditions with their houses flooded completely and no way out. Please look this way @chennaicorp @chennaipolice_ #ChennaiRains #CycloneMichaung… https://t.co/wNG41IxCdF
விஐபி சாலையான ராதாகிருஷ்ணன் சாலையில் எப்போதுமே தண்ணீர் தேங்காது. காரணம் ஜெயலலிதா, கருணாநிதி என முன்னாள் முதல்வர்கள் பலரும் தலைமைச் செயலகம் செல்வதற்கு இந்த சாலையைத்தான் பயன்படுத்துவார்கள். எப்போதும் பளிச்சென்று இருக்கும் இந்த சாலை. இந்த ஆண்டு பெய்த மழையால் 3 நாட்கள் வெள்ளம் தேங்கியது. படகு கூட இந்த சாலையில் ஓடியது.
50 மணி நேரமாக மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் வெள்ளத்தில் தத்தளிப்பதாகவும் ஒருவர் கூட வந்து உதவி செய்யவில்லை என்றும் ட்விட்டரில் குமுறலை வெளிப்படுத்தினர் மயிலாப்பூர் மக்கள். ராதாகிருஷ்ணன் சாலை, சிஐடி காலனி என பல பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் இங்குள்ள கால்வாயில் வடிந்து கடலில் போய் கலக்கும். இந்த ஆண்டு கால்வாய்கள் தூர்ந்து போய் வெள்ள நீர் தேங்குவதற்கு காரணமாகி விட்டது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
லஸ் கார்னர் பகுதியில் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் குதித்தனர் பொதுமக்கள். ராதாகிருஷ்ணன் சாலை தண்ணீர் தேங்கியதால் 3 நாட்களாக மின்சாரம் தர மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். விஐபி பகுதியாக இருக்கும் மயிலாப்பூரில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எந்த பிரச்சினையும் வராது. 2015ஆம் ஆண்டு மழை வெள்ளத்தின் போதும், வர்தா புயலின் போதும் ஒரே நாளில் தண்ணீர் வற்றி விடும். மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு விடும். தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போய் தண்ணீர் தேங்க காரணமாகி விட்டது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
Road roko at Luz signal in Mylapore now demanding water removal from PS Sivaswamy Salai and restoration of power supply #ChennaiFloods2023 pic.twitter.com/brwsQriKaD
— Siddharth Prabhakar (@Sidprabhakar7) December 6, 2023
குடிநீர் கிடைக்கவில்லை, பால் சப்ளை இல்லை, மின்சாரமும் இல்லை என்று குற்றம் சாட்டும் மயிலாப்பூர் பொதுமக்கள், போர் தண்ணீர் போட முடியாமல் 3 நாட்கள் பாத்ரூம் கூட போக முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே கடைகளில் வியாபாரம் மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் கோவில்களில் சரியாக அபிஷேகம் கூட செய்ய முடியவில்லை என்றும் புகார் கூறியுள்ளனர்.
மின்சாரம் இல்லாத காரணத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு போல எந்த ஆண்டும் இப்படி ஒரு சிரமத்தை அனுபவித்ததில்லை என்று கூறும் பொதுமக்கள் மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கரண்ட் எப்போது வரும்? எங்களின் கவலை எப்போது தீரும் என்பது மயிலாப்பூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Not a single person from corporation or eb has come in ps siva swamy salai Mylapore even after repeated calls and request shame on you kids from Vivekananda college have come together to help us no power still after more than 50 hours @chennaicorp @ChennaiTraffic @chennaiweather pic.twitter.com/7sVwu4J1VM
— A PAWAN MEHTA (@APAWANMEHTA1) December 6, 2023
அதேநேரம், மயிலாப்பூர் மக்கள் இப்போதுதான் முதல் முறையாக பிற ஏரியா மக்கள் படும் கஷ்டத்தை உணர்ந்துள்ளனர் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது. ஏரியா வாரியாக மக்களை பார்க்காமல் வட சென்னை முதல் விஐபிகள் வாழும் மயிலாப்பூர் வரை எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications