ஆகஸ்ட், செப்டம்பரில் மழைப்பொழிவு இயல்பைவிட அதிகரிக்கும்.. இப்பவே 2% அதிகம்: இந்திய வானிலை மையம்
டெல்லி: இந்த மாதம் ஆகஸ்ட், மற்றும் அடுத்த செப்டம்பர் மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை நல்ல மழை பெய்து வருகிறது.. வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது.

எச்சரிக்கை: ஆனால், கேரளாவில் நிலைமை மோசமாக இருக்கிறது.. எனினும், பல இடங்களில் வரும் 5-ம் தேதி வரை கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
முக்கியமாக, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்: அதேபோல, ஒடிசாவுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. ஒடிசாவில் நேற்று முதல் இன்று வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. குறிப்பாக அங்குல், கட்டாக், சோனேபூர், சம்பல்பூர் உட்பட சில மாவட்டங்களில் 7 முதல் 20 செ.மீ மழை பெய்யலாம் என அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருதுன்ஜெய் மொகபத்ரா செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைப்பொழிவு நீண்டகால சராசரி அளவான 422.8 மி.மீ-ல் 106 சதவீதம்இருக்கும். கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இப்போதுவரை கிட்டத்தட்ட 453.8 மி.மீமழை பதிவாகியுள்ளது... இது வழக்கமான அளவைவிட 2% அதிகமாகும்.
அதிக மழை: அதேபோல, இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் மழைப்பொழிவு இயல்பாகவும், சில இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் இருக்கும்... வடகிழக்கு, அதையொட்டியுள்ள கிழக்குப் பகுதி, லடாக், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி, மத்தியில் சில பகுதிகளில் மழைப் பொழிவு இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும்.
கடந்த ஜூலையில், நாட்டின் மழைப்பொழிவு இயல்பைவிட 9 சதவீதம் அதிகமாக இருந்தது.. மத்தியப் பகுதியில் மழை 33 சதவீதம் கூடுதலாக பெய்திருக்கிறது.. பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் மத்திய பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளது.
மழைப்பொழிவு: கிழக்கு உத்தர பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தின் கங்கை ஆற்றுப்பகுதிகள், வடகிழக்கு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. அதேபோல, ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை குறைவாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications