பட்ஜெட்டில் சர்க்கரை மனியம் ரத்து- அப்போ இனி ரேசனில் சர்க்கரை கிடைக்காதா?
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஷாப்பிங் மால்களில் பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்யப்படும் சர்க்கரை கிலோ ரூ. 50 அல்லது ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. அண்ணாச்சி கடைகளில் கிலோ சர்க்கரை ரூ. 40க்கு கிடைக்கிறது.
காலை விடிந்த உடன் வெள்ளை சர்க்கரை போட்டு டீ அல்லது காபி குடித்து விட்டுதான் மற்ற வேலைகளை பார்ப்பார்கள். கடைகளில் சர்க்கரை வாங்குவதை விட ரேசன் கடைகளில் சர்க்கரை வாங்கி உபயோகித்து வந்தனர் பெரும்பாலான பொதுமக்கள். ஏனெனில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 பைசாவிற்கு கிடைக்கிறது. இப்போது இதற்கும் வேட்டு வைத்து விட்டது மத்திய அரசு.

புதன்கிழமையன்று லோக்சபாவில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரேசன்கடைகளில் விநியோகம் செய்யப்படும் சர்க்கரைக்கு மத்திய அரசு ஒரு கிலோவிற்கு மானியமாக ரூ. 18.50 வழங்கி வந்தது. மாநில அரசுகள் அந்த மானியத்தை பெற்று அதன் மூலம் ரேஷனில் குறைந்த விலைக்கு சர்க்கரை வினியோகித்து வருகிறது. இதன் காரணமாகவே ஒரு கிலோ ரூ. 13.50க்கு சர்க்கரை விற்பனை செய்யப்படுகிறது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 40 கோடி பேருக்கு சர்க்கரை என்ற அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் 21 லட்சம் டன் சர்க்கரை வாங்கப்பட்டு வருகிறது. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் என்ற வேறுபாடு கிடையாது. எனவே, ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை இனி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்காது.
ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.200 கோடி மட்டும் ஒதுக்கப்படும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்திருக்கிறார். இதனால், பட்ஜெட் அமலுக்கு வரும் ஏப்ரல் முதல் சர்க்கரை மானியம் கிடைக்காது என்ற அச்சம் எழுந்துள்ளது.
ரேசன் கடைகளில் தொடர்ந்து சர்க்கரை விற்பனை செய்யப்பட வேண்டுமெனில் மாநில அரசுகள்தான் அதற்கென நிதியை ஒதுக்க வேண்டும். மாநில அரசுகள் இந்த நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அப்போ ஏழை, நடுத்தர மக்களுக்கு சர்க்கரை என்பது எட்டாக்கனியாகுமா? அல்லது மாநில அரசுகள் மனது வைக்குமா?
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications