Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ரோகிணி செய்த துரோகத்தால் மனோஜ் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். அதைப் பார்த்து முத்துவும் மீனாவும் பீல் பண்ணுகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் கதை

சிறகடிக்க ஆசை சீரியலில் சில மாதங்களாகவே கதை ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. ரோகிணியை வீட்டை விட்டு துரத்திய பிறகு மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று விஜயா பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் ரோகிணி மனோஜ்க்கு டைவர்ஸ் கொடுக்கவே மாட்டேன் என்று விடாப்பிடியாக புது புது பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் நேற்றைய எபிசோடு

இதற்கிடையில் முத்துவும் மீனாவையும் வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சிந்தாமணியும் போலி சாமியாரை வைத்து பிளான் போட்டு கடைசியில் அது ரோகிணிக்கே பிரச்சனையாக போயிருக்கிறது. அந்த போலி சாமியரும் ரோகிணி சொல்லி தான் நான் இங்கே வந்து நாடகம் போட்டேன் என்று ரோகிணியை கோர்த்து விட்டு விடுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ

இதை உண்மை என நம்பும் விஜயா மனோஜ் ஐடியாவை கேட்டு ரோகிணியை அடி வெளுத்து வாங்கி இருக்கிறார். இதை வைத்து இப்போது ரோகிணி விஜயாவுக்கு எதிராக பிளான் போட்டு இருக்கிறார். தனக்கு நடந்த கொடுமைகளை மகளிர் ஆணையத்தில் கம்பளைண்ட் செய்து இருக்கிறார். இந்த நிலையில் ரோகிணி விஷயத்தில் விஜயா லஞ்சம் கொடுக்கப் போக அது அவருக்கே பிரச்சனையாக மாறி இருக்கிறது.

ரோகிணிக்காக வந்த மகளிர் ஆணையத்து ஆபீஸரிடம் பேச்சு வார்த்தை நடத்த முத்துவும் மீனாவும் முயற்சி செய்தனர். ஆனால் ஆபீசில் நடந்த சம்பவத்தை பார்த்து அவர்கள் பதறிப் போய் இதற்கு மனோஜ் வந்து பேசினால் மட்டும்தான் முடியும் என்று சொல்லிவிட்டனர். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் மனோஜை கூட்டிக்கொண்டு அந்த ஆபீசுக்கு போய் இருக்கின்றனர்.

பீல் பண்ணிய மனோஜ்

அங்கு அந்த ஆபீஸர் மனோஜிடம் நீங்கள் ரோகிணியை பற்றி ஏதாவது பேச போறீங்களா? என்று கேட்க அதற்கு மனோஜ் ரொம்பவும் செண்டிமெண்டாக பேசுகிறார். எனக்கு ரோகிணியை ரொம்ப பிடிக்கும் என் வாழ்நாள் முழுக்க அவ என் கூடவே இருக்க வேண்டும் என்று தான் அவளை காதலித்து கல்யாணம் பண்ணுனேன். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவள் எனக்கு செய்த ஏமாற்றமும் துரோகமும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியல.

சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர்
நம்ம நம்புறவங்க நமக்கு செய்த துரோகம், நமக்கு எந்த அளவு இருக்கு வலி கொடுக்கும் என்று எல்லோருக்கும் புரியாது என்று சென்டிமெண்டாக கண் கலங்கியபடி பேச, அதை பார்த்து அந்த ஆபீஸரும் ஃபீல் பண்ணுகிறார். இதனால் அந்த ஆபீஸர் மனோஜ்க்கு சப்போர்ட் செய்வாரா? இல்லையா என்ற எதிர்பார்ப்பு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+