சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 28 update) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 28ஆம் தேதி எபிசோடில் ரோகிணிக்கு விஜயாவும் மனோஜும் சேர்ந்து பெரிய தண்டனை கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ரோகிணி எதிர்பார்க்காத பதிலடி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் முத்து மீனா குடும்பத்திற்குள் ஒரு புது உறவு வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவும் மனோஜும் பிளான் போட்டு ரோகிணியை தன்னுடைய ஷோரூமுக்கு வர வைக்கின்றனர். ரோகிணியும் சந்தோஷமாக அங்கே வர, அங்கு விஜயா இருப்பதை பார்த்ததும் ரோகிணி அதிர்ச்சி ஆகிறார். என்ன ஆன்ட்டி இங்க வந்து இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? என்று நலம் விசாரிக்கிறார்.
அதற்கு விஜயா நீ என்கிட்ட எத்தனை முறை தான் நாடகம் போட்டு ஏமாத்துவ? உன்னால நான் தான் ஒவ்வொருத்தர் கிட்டயும் அசிங்கப்பட்டு இருக்கிறேன். நீ பிளான் பண்ணி மீனாவை வீட்டை விட்டு வெளியே போக வைப்பதற்காக என் தாலி பாக்கியத்திற்கு பிரச்சனை என்று போலி சாமியாரை வர வச்சிருக்க என்று சொன்னதும் ரோகிணிக்கு குழப்பம் ஆகிறது.
ரோகிணிக்கு தெரிந்த உண்மை
இதெல்லாம் செய்தது சிந்தாமணி தானே? ஆனால் எப்படி என் பேரு வந்து மாட்டுச்சு? என்று குழப்பத்தில் யோசித்துக் கொண்டிருக்க, அதற்கு விஜயா நீ இன்னும் என்ன நாடகம் போடலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா? உனக்கு தண்டனை கொடுக்கணும் என்று சொல்லி ஏற்கனவே மனோஜ் பிரண்டை சாட்டையால் அடிக்க ஒருவரை ஒரு முறை ரோகிணி செட் செய்திருந்தாரே அதே நபரை கூட்டிக்கொண்டு வந்து ரோகிணியை அடிக்க வைக்கிறார்.
ரோகிணிக்கு விழுந்த அடி
ரோகிணி வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தாலும் விஜயாவும் தடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் ரோகிணி மயங்கி கீழே விழுந்து விடுகிறார். அதனால் சாட்டை அடிக்கும் நபர் பயந்து போய் அங்கிருந்து போய் விடுகிறார். உடனே விஜயாவும் மனோஜிடம், இவ கண்ணு முழிச்சதும் நீ வந்துரு என்று சொல்லிவிட்டு போகிறார்.
பிறகு கண் விழித்த ரோகிணி உன் கூட எத்தனை வருஷமா நான் வாழ்ந்து இருக்கிறேன்? ஆனால் நீ என்னை அடிக்க துணிஞ்சிட்ட என்று கேட்க, அதற்கு மனோஜ் இதெல்லாமே அம்மாவோட பிளான் என்று விஜயாவை மாட்டி விடுகிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் ரெஸ்டாரண்ட்க்கு மீனா வருகிறார். அந்த நேரத்தில் முத்து மனோஜ்க்கு பெண் பார்க்க போன இடத்தில் சொந்தக்கார பொண்ணுன்னு தெரிய வந்ததே ஸ்வேதா அவரை கூட்டிக்கொண்டு ரெஸ்டாரண்ட்க்கு வருகிறார்.
புது உறவு
ஸ்வேதா ஸ்ருதியின் ரெஸ்டாரண்ட்க்கு வந்ததும் எல்லோருடைய நல்லபடியாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு எனக்கு ஐடி வேலை பார்த்து ரொம்ப ஃபோர் அடிச்சிடுச்சுச்சு. உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன் குடும்பத்தில் நீங்க எல்லாரும் வேலை பாக்குறீங்க அதில் ஏதாவது வேலை இருந்தா எனக்கு சொல்லுங்க நானும் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போகிறார்.
சிந்தாமணியின் நாடகம்
அடுத்ததாக மறுபக்கத்தில் ரோகிணிக்கு அவருடைய அம்மா ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்க சிந்தாமணி ரோகிணிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது சிந்தாமணியிடம் ரோகிணி நீங்க தானே அந்த போலி சாமியாரை என்னுடைய மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சீங்க? ஆன நான் அனுப்பி வச்சேன்னு அந்த பொம்பள சொல்லி இருக்கு என்று சொல்ல, அப்படி சொல்ல நான் தான் சொன்னேன் என்று சிந்தாமணி சொல்கிறார்.
இதை கேட்டு ரோகிணிக்கு செம ஷாக் ஆகிறது. பிறகு மாஸ்டர் என்கிட்ட தான் நல்லபடியா பேசிட்டு இருக்காங்க என்னை பத்தி அவங்களுக்கு தெரிய வந்தால் அப்புறம் என்கிட்ட பேச மாட்டாங்க. பிறகு அந்த வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியாது அதனால தான் உனக்காக இப்படி சொல்ல சொன்னேன் என்று கதையை மாற்றிவிட அதை ரோகிணியும் நம்பி விடுகிறார்.
அதிர்ச்சியில் விஜயா
கடைசியாக விஜயா வீட்டில் இருக்கும்போது அங்கு ஒரு பெண் வருகிறார். அவர் தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்கும் ஆபீஸர் என்று அறிமுகம் செய்து கொண்டு ரோகிணியை விஜயா அடித்ததாக சொல்ல, மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அடுத்த வாரத்தில் விஜயா ஜெயிலுக்கு போக போகிறாரா? அல்லது ரோகிணி விஜயாவை மன்னிப்பது போல நாடகம் போடப்போகிறாரா என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க













Click it and Unblock the Notifications