ரகுராம் ராஜன் பற்றி கமெண்ட்.. சு.சுவாமியை டிவி பேட்டியில் வறுத்தெடுத்த மோடி! அர்ணாப்பிடம் ஆவேசம்
டெல்லி: அரசு நிர்வாகத்தைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை, விளம்பர பேச்சு நாட்டுக்கு பலன்தராது என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை விமர்சனம் செய்த பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமியை பெயரை குறிப்பிடாமல் வறுத்தெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமராக பதவியேற்ற பிறகு தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு தனது முதல் பிரத்யேக பேட்டியை மோடி அளித்தார். டைம்ஸ் நவ் என்ற அந்த ஆங்கில சேனலின் ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.
உங்களது ராஜ்யசபா எம்.பி. ஒருவர் ரகுராம் ராஜன் குறித்து கூறிவரும் கருத்துக்கள் ஏற்புடையதுதானா என்று, அர்ணாப் கோஸ்வாமி கேள்வி எழுப்பினார். சுப்பிரமணியன்சுவாமிதான், சமீபகாலமாக ரகுராம் ராஜனை விமர்சனம் செய்து வந்தார். அவர் மனதளவில் இந்தியர் இல்லை என்பது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார்.

காரணம்
பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், நிதி அமைச்சர் பதவிக்காகவும், சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு காய் நகர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.

தேவையில்லை
இந்நிலையில், சர்ச்சை குறித்து மோடி கொஞ்சம் காட்டமாகவே பதிலளித்தார். அவர் கூறியது: எனது கட்சிக்குள் இருந்து அந்த குரல் வருகிறதோ அல்லது வெளியே இருந்து வருகிறதோ, அது பற்றி கவலையில்லை, ஆனால், இது தேவையில்லாத கருத்து.

விளம்பர நோக்கம்
விளம்பர நோக்கத்திற்காக கூறப்படும் அதுபோன்ற கருத்துக்களால் நாட்டுக்கு பலன் கிடைக்காது. ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேம்டும். அரசு நடைமுறையைவிடவும் நான் தான் பெரிய நபர் என்று எவரேனும் நினைத்தால், அது தவறு.

தெளிவாக உள்ளேன்
எனக்கு ரகுராம் ராஜன் பற்றி எந்த குழப்பமும் கிடையாது. நம்மைவிட அவரின் தேசப்பற்று எந்த விதத்திலும் குறைந்தது கிடையாது. 2014ல் நான் பிரதமராக பதவியேற்ற உடனேயே ரகுராம் ராஜனை நீக்க முயல்வேன் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர் முழு சுதந்திரத்தோடு பதவியில்தான் உள்ளார்.
|
நாட்டு பற்று
ரகுராம் ராஜன் இனி எங்கு பணியாற்றினாலும்கூட அவர் இந்திய நலனை மனதில் வைத்துதான் பணியாற்றுவார் என்பது உறுதி. இவ்வாறு மோடி தெரிவித்தார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications