இனி எல்லாம் இப்படித்தான்..? குப்பையில் வீசப்பட்டது ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள்!
ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களை சசிகலாவின் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இதனைக் கண்டு அடிமட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளன. சசிகலா புதிய பொதுச்செயலளாராக பதவியேற்றுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களை குப்பையில் வீசியுள்ளனர்.
சிறந்த ஆளுமை, துணிச்சல் மிக்க பெண்மணி என்ற பெருமைக்கெல்லாம் பெயர் போனவர் மறைந்த முதல்வர் ஜெயலிதா. ஜெயலலிதா கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஜெயலலிதா அடிமட்ட தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் என கூறப்படுவதுண்டு. அவராலேயே பலர் இன்று அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் எம்பிக்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவை மறந்த நிர்வாகிகள்
ஆனால் அவரால் அடையாளம் காட்டப்பட்ட பலர் இன்று அவரையே மறந்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து துதி பாடி வருகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவரது படம் போட்ட காலண்டர்களை அச்சிட்டு விநியோகிக்க அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போட்டி போடுவர்.

ஜெயலலிதா படம் போட்ட காலண்டர் ரத்து
ஆனால் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் அவரது படம் போட்டு சிவகாசியில், காலண்டர் தயாரிக்க ஆர்டர் கொடுத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் ஆர்டரை உடனடியாக ரத்து செய்தனர்.

குப்பையில் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள்
மேலும் சசிகலா படத்துடன் காலண்டர் தயாரிக்கவும் அவர்கள் ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் ரத்து செய்ய முடியாமல் போனதால் அவரது படம் போட்ட காலண்டர்கள் தற்போது கட்டுக்கட்டாக குப்பையில் வீசியெறியப்பட்டுள்ளன.

அடிமட்ட தொண்டர்கள் வேதனை
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று அவரையே மறந்து அவரது படம் போட்ட காலண்டர்களை குப்பையில் வீசியுள்ளதாக அடிமட்டத் தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications