தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தாய்லாந்து நாட்டில் இருந்து ஹைட்ரோபோனிக் மரிஜுவானா என்ற உயர் ரக கஞ்சாவை கடத்தில் வந்த கேரள மாடல் அழகியை மும்பை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11.82 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Kerala Model Hydroponic Marijuana Case

மேடை வெளிச்சம், கேமராக்களின் மின்னொளி, 'மிஸஸ் கேரளா' பட்டத்துக்கான அந்தப் பெருமிதம்... இவை எதற்கும் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு இருண்ட உலகிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் ஹர்ஷா சன்னி. கேரளாவின் அழகுப் போட்டி மேடைகளில் ஜொலித்த ஒரு முகம், இன்று மும்பை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தலைகுனிந்து நிற்கிறது.

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் அவர் சிக்கிய விதம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் மாடலிங் துறையையும் அதிர வைத்துள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாங்காக்கிலிருந்து வந்திறங்கிய அந்த விமானத்தில், ஒரு மெல்லிய பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது.

28 வயதான ஹர்ஷா சன்னியின் முகத்தில் தெரிந்த அந்தச் சிறு நடுக்கம், அனுபவம் வாய்ந்த சுங்கத்துறை அதிகாரிகளின் கூர்மையான கண்களில் இருந்து தப்பவில்லை.

சந்தேகத்தின் பேரில் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அவர் கொண்டு வந்திருந்த 'டிராலி' பை ஒரு பெரும் ரகசியத்தைச் சுமந்து வந்திருந்தது அம்பலமானது.

அந்தப் பையின் ரகசிய அறைகளில் லாவகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளைப் பிரித்த அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதற்குள் இருந்தது சாதாரண கஞ்சா அல்ல; சர்வதேச சந்தையில் அதீத கிராக்கி கொண்ட 'ஹைட்ரோபோனிக் மரிஜுவானா' எனப்படும் உயர் ரக போதை இலைகள்.

சுமார் 11.82 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தப் போதைப் பொருள், நவீன தொழில்நுட்பத்தில் மண்ணில்லாமல் வளர்க்கப்படும் வீரியம் மிக்க ஒன்று. ஒரு மாடல் அழகி இவ்வளவு பெரிய தொகையிலான போதைப் பொருளைக் கடத்தி வந்தது, அதிகாரிகளையே ஒரு நிமிடம் திகைக்க வைத்தது.

யார் இந்த ஹர்ஷா சன்னி?

கேரளாவின் மாடலிங் உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டவர். 2025-ம் ஆண்டுக்கான 'மிஸஸ் கேரளா' அழகுப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, பலரது கவனத்தையும் ஈர்த்தவர். சமூக வலைதளங்களில் ஜொலித்த இவரின் இந்தத் திடீர் மாற்றம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

வெறும் பணத்தாசைக்காக இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாரா அல்லது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு முக்கியக் நபராகச் செயல்பட்டாரா என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹர்ஷாவிடம் நடத்தப்படும் விசாரணை, பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் போதைப்பொருட்களைக் கடத்தும் பெரிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இவர் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அழகும் புகழும் ஒருபுறம் இருந்தாலும், குறுக்கு வழியில் கோடீஸ்வரராகத் துடித்த ஒரு பெண்ணின் கனவு, இன்று கஞ்சா வாசனையோடு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது. மாடலிங் துறையின் நிழல் பக்கங்களை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+