"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி தவெகவில் இணைவதற்கு முன் மதுரை மேயர் பதவிக்கான உத்தரவாதம் கேட்டு வருவது தெரிய வந்துள்ளது. ஆனால் தவெக தலைமை மதுரை மேயர் பதவியை கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது. மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் மருது பாண்டியன் மேயர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார். அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் ஆதரவாளர் என்பதால், தவெக தலைமை அழகிரியின் மகள் கயல்விழிக்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

தமிழக அரசியல் களத்தில் தென் மாவட்டங்களின் முடிசூடா மன்னராக வலம் வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் குடும்பத்தில் இருந்து, மற்றொரு வாரிசு அரசியல் எண்ட்ரி கொடுக்கத் தயாராகி வருகிறார். அழகிரியின் மகள் கயல்விழி, பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் மாற்றங்களுக்குப் பிறகு, தற்போது ஆளுங்கட்சியான தவெகவில் இணைய தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

MK Alagiri

ஆனால், தவெக-வில் இணைவதற்கு முன்பாக 'மதுரை மேயர்' பதவிக்கான உத்தரவாதத்தைக் கயல்விழி கேட்டு வருவதும், அதற்குத் தவெக தலைமை பிடிகொடுக்காமல் தயக்கம் காட்டி வருவதும் தென் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை என்றாலே மு.க.அழகிரியின் கோட்டை என்ற பிம்பம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் மூலமாக தவெகவில் முக்கிய அதிகாரத்தை பெற கயல்விழி திட்டமிட்டுள்ளார்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக சார்பில் தனக்கு 'மதுரை மாநகராட்சி மேயர்' பொறுப்பு என்ற உறுதியான வாக்குறுதியை வழங்க வேண்டும் என தவெக உயர்மட்டக் குழுவிடம் நிபந்தனை விதித்துள்ளார். ஆனால், கட்சிக்குள்ளேயே நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதால், கயல்விழிக்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்க முன்வரவில்லை எனத் தெரிகிறது.

கயல்விழிக்கு மேயர் சீட் மறுக்கப்படுவதற்குப் பின்னால் தவெக-வுக்குள் மிகப்பெரிய உள் அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் தொகுதி தவெக பொறுப்பாளரான மருதுபாண்டியன், மதுரை மேயர் நாற்காலியைக் கைப்பற்றத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார். இவர் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் ஆதரவாளர் ஆவார்.

அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரின் முழு ஆதரவு மருதுபாண்டியனுக்கு இருப்பதால், அழகிரி மகளின் நிபந்தனையைத் தவெக தலைமை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருகிறது. அழகிரியின் மகளை தவெகவுக்குள் கொண்டு வந்தால், அது திமுகவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று கணக்கு போடுகின்றனர். ஆனால் கட்சியில் இணையும் முன்பே நிபந்தனை விதிப்பதால் தலைமை தயக்கம் காட்டுகிறது.

மதுரை மாநகராட்சியைத் தன் வசம் கொண்டு வர தவெகவின் அமைச்சர்களும், நிர்வாகிகளும் இப்போதே தங்களுக்குள் கோதாவில் இறங்கியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரின் மகளுக்கா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர் மருதுபாண்டியனுக்கா? மதுரை மேயர் நாற்காலி யாருக்குத் தாராளமாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+