யாரோட பிடியலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்ட விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், "எங்களுக்கு ஊழல் செய்யணும்னோ, இந்த நிலத்த தனியார் கிட்ட கொடுத்து காசு சம்பாதிக்கணும்னோ எண்ணம் கிடையாது.. இனி உங்கள மிரட்ட யாரும் வர மாட்டாங்க... உங்க பிரச்சனைகள சரி செய்ய தான் நாங்க இருக்கோம்.." என்று பேசினார்.

அதேபோல் "யாரோட பிடியலையும் திருவண்ணாமலை கிடையாது.. மக்களோட பிடியிலதான் திருவண்ணாமலை இருக்கு.. அதுவும் விவசாயிகளோட பிடியிலதான் இருக்கு.. இந்த அரசு உங்களோட அரசு.." என்றும் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

No Intention of Corruption Minister Aadhav Arjuna Assures Protesting Melma Farmers

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 9 கிராமங்களில் (மேல்மா, அத்தி, நர்மாபள்ளம், குரும்பூர், தேத்துறை, நெடுங்கல், வடஆலப்பிறந்தான், வீரபாக்கம், இளநீர்குன்றம்) சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையின் 3-வது கட்ட விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் மிகத் தீவிரமாகப் போராடி வருகிறார்கள்.

அரசு தரப்பில் இந்த நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்கள் (விவசாயம் செய்யப்படாத நிலங்கள்) என்று கூறினாலும், போராடும் விவசாயிகள் இதனை முற்றிலுமாக மறுக்கிறார்கள். இந்தப் பகுதியில் நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் பூக்கள் என வருடத்திற்கு மூன்று போகமும் (முப்போகம்) செழிப்பாக விளையக்கூடிய நன்செய் நிலங்கள் இவை என்பது விவசாயிகளின் வாதிடுகிறார்கள். தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த விளைநிலங்களை தொழிற்சாலைகளுக்காகக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.

செய்யாறு பகுதியில் ஏற்கெனவே 1 மற்றும் 2-ஆம் கட்ட சிப்காட் வளாகங்கள் (மாங்கால் பகுதியில்) செயல்பட்டு வருகின்றன. "ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிப்காட்டிலேயே இன்னும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாகத்தான் இருக்கின்றன; அப்படி இருக்கும்போது, மீண்டும் புதிய விளைநிலங்களை ஏன் அழிக்க வேண்டும்?" என்பது விவசாயிகளின் பிரதானக் கேள்வியாக உள்ளது. தொழிற்சாலைகள் வருவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், நச்சுக்கழிவுகளால் சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயமும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் பாழாகிவிடும் என்றும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த திட்டத்தின் போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் மீது கடந்த ஆட்சியில் குண்டர் சட்டம் எல்லாம் பாய்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. அதன்பிறகு அதே அருள் ஆறுமுகம் தவெக சார்பில் திருவண்ணாமலையில் எவ வேலுவை எதிர்த்து களம் கண்டார். கடும் போட்டிக்கு பின்னர், மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் எவ வேலு வென்றார். கடைசி வரை எவ வேலுவுக்கு போட்டி இருந்தது. எவ வேலுவை பொறுத்தவரை மிகவும் செல்வாக்கான அமைச்சராக திமுகவில் இருந்தவர். அவருக்கு கடும் போட்டி கொடுத்த அருள் ஆறுமுகம் தான் செய்யாறு பிரச்சனைக்காக போராடியவர். ஆட்சிகள் மாறினாலும் பிரச்சனை இன்னும் முழுமையாக முடியவில்லை..

இந்த சூழலில் செய்யாறு மேல்மா சிப்காட் திட்ட விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளை மிரட்டுவதற்கு பிரதம மந்திரிக்கே அதிகாரம் கிடையாது.. அப்படி இருக்கும் போது அதிகாரம் பண்ண முடியுமா.. கிடையவே கிடையாது. பஞ்சாப் விவசாயிகளை கை வைத்தார்கள்.. என்னாச்சு... விவசாயிகள் தொடர்பான சட்டத்தையே வாபஸ் வாங்கினார்கள்.. விவசாயிகள் வலிமை அது.. விவசாயிகளை சாதாரணமாக எடை போடக்கூடாது.. அதிகாரிகளை அதிகாரிளாக பார்க்க வேண்டாம்.. அவர்களை சகோதர சகோதரிகளாக பாருங்கள். நான் மாதம் மாதம் இங்கு வருவேன்... இது தேர்தல் காலம் கிடையாது.. வாக்குக்காக இதனை கூறவில்லை..

முதல்வர் விஜய்யை பொறுத்தவரை, விவசாயிகள் நன்கு விவசாயம் செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும்... அதேபோல் விவசாயிகள் நெல்லை கொடுத்தால் 60 ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாக புகார்கள் வந்தது. அதனை நீ இனி யாரும் கேட்க மாட்டார்கள்.... அதனை ஒழித்துவிடுவோம்.. உங்கள் விளைபொருட்களுக்கான விலையை உருவாக்க எங்களுக்கு நேரம் வேண்டும்... முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ மட்டத்தில் ஊழல் கிடையாது.ஆனால் இன்னும் சில கீழ் மட்டத்தில் பிரச்சனை இருக்கிறது. அதனை நிச்சயம் சரி செய்துவிடலாம்.. தைரியமாக இருங்க...யாரோட பிடியலையும் திருவண்ணாமலை கிடையாது.. மக்களோட பிடியிலதான் திருவண்ணாமலை இருக்கு.. அதுவும் விவசாயிகளோட பிடியிலதான் இருக்கு.. இந்த அரசு உங்களோட அரசு.. இங்கு உங்கள் மீது போடப்பபட்ட போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசு திரும்ப பெற அனைத்து முயற்சியும் செய்யும்" இவ்வாறு ஆதவ் அர்ஜுனா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+