Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவுக்கு கிடைத்த ஜாமீன்.. காலை முதல் நிலவிய பரபரப்பு Live

Subscribe to Oneindia Tamil

-பெங்களூர் விரைகிறார்கள் அதிமுகவினர்

-ஜெயலலிதாவை வரவேற்க பரப்பன அக்ரஹாரா சிறை முன்பு தொண்டர்கள் குவிய வாய்ப்பு

-சிறையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது பெங்களூர் போலீஸ்

-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சி-ராம் ஜெத்மலானி

-ஜெயலலிதாவுக்கு ஜாமீனை மறுத்து ஹைகோர்ட் தவறு செய்துவிட்டது-ராம் ஜெத்மலானி

-தீர்ப்பு தேதியன்று சென்னையில் இருந்து ஜெயலலிதா வந்த சிறப்பு விமானம் பெங்களூரிலேயே நிற்கிறது

-பெங்களூர் வந்த சிறப்பு விமானத்திலேயே சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா

-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு ஜெ. கட்டளையிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

-தமிழகத்தில் நடைபெற்ற வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

-2-3 மாதத்துக்கு வீட்டை விட்டு ஜெ. வெளியே செல்லமாட்டார்- ஜெ. வழக்கறிஞர் உத்தரவாதம்

-விதித்த கெடுவுக்கு மேல் ஒருநாள் கூட இழுத்தடிக்காமல் ஆவணங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

-கறுப்பு சட்டையை கழற்றிவிட்டு வெள்ளைச்சட்டை போட்ட அதிமுகவினர்

-போயஸ் கார்டனில் அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம்

-ஜெ. தரப்பில் 35,000 பக்க பதில் மனுவை டிசம்பர் 18க்குள் கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்

-1 நாள் தள்ளிப் போனாலும் ஜாமீன் ரத்தாகும்- சுப்ரீம் கோர்ட்

-ஜாமீன் காலத்தை மருத்துவ வசதிக்கு மட்டுமே ஜெ. பயன்படுத்துவார்- பாலி நரிமன்

-ஜெ.வுக்கு எதிரான 4 ஆண்டுகால சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

-கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெ. மேல்முறையீட்டு மனு மீது 3 மாதத்தில் விசாரணை முடிய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்

-தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும், எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது- சுப்ரீம் கோர்ட்

-அசம்பாவிதம் ஏதும் நடந்தால் ஜாமீனை மறுபரிசீலனை செய்வோம்- சுப்ரீம் கோர்ட்

-சு.சுவாமி மீதோ, நீதிபதிகள் மீதோ களங்கம் கற்பித்தாலும் ஜாமீன் மறுபரிசீலனை ஆகும்

-ஜெ.வுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி கர்நாடக ஹைகோட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது

-இந்த வழக்கில் டிசம்பர் 18க்குள் ஜெ. தரப்பு விவர மனு தாக்கல் செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்

-டிசம்பர் 18ம் தேதி வரை வீட்டை விட்டு ஜெயலலிதா வெளியே போக தடை

-ஜெ. மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்துக்குள் முடிக்க கர்நாடகா ஹைகோர்ட்டுக்கு உத்தரவு

-ஜெயிலுக்குப் போன 21வது நாளில் ஜாமீன் கிடைத்தது

-அதிமுகவினர் உற்சாகக் கொண்டாடம். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி

abmk

-அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூரு பயணம்

-6 தமிழக அமைச்சர்கள் திடீர் பெங்களூர் பயணம்

-சி்றையில் இருந்து இன்று அல்லது நாளை வெளியே வருவார் ஜெயலலிதா

-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது

-ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்

-அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூரு பயணம்

-6 தமிழக அமைச்சர்கள் திடீர் பெங்களூர் பயணம்

-18 ஆண்டு வழக்கை இழுத்தடித்தால் ஜாமீன் கொடுத்தால் இன்னும் எத்தனை ஆண்டு இழுப்பீர்களோ? தலைமை நீதிபதி கேள்வி

-ஜெ. ஜாமீன் மனுவை 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி

-ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர்

-கொட்டும் மழையிலும் அசராமல் பேயஸ் கார்டன் வீடு முன்பு பட்டாசுடன் காத்திருக்கும் அதிமுகவினர்

-உச்சநீதிமன்றத்தில் இருந்து சம்மன் வராததால் பவானிசிங் ஆஜராகவில்லை

-சுப்ரீம் கோர்ட் உத்தரவிடாததால் ஜெ. ஜாமீன் மனு மீதான விசாரணையில் பவானிசிங் ஆஜராகவில்லை

-அரசு தரப்பு வக்கீல் இல்லாமலே நடக்கிறது ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை

-ராகு காலத்தில் ஜெ. ஜாமீன் மனு மீது விசாரணை

-பெண்களுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலம் சாதகமானது என்பதால் அதிமுகவினர் மகிழ்ச்சி

-ஜெ. ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகவில்லை

-ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை- ஜெ. வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதம்

-உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜெ.க்கு ஜாமீன் வழங்க வேண்டும்: பாலி நாரிமன்

-சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெ.வால் பெற முடியவில்லை: பாலி நாரிமன் வாதம்

-ஹெச்.எல். தலைமையிலான பெஞ்ச்சில் நீதிபதிகள் மதன் லோகுர், சிக்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

-சசிகலா, இளவரசு, சுதாகரன் தரப்பில் வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜரானார்!

-தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் ஜெ. ஜாமீன் மனுவை விசாரித்துக் கொண்டிருக்கிறது

-ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் வாதங்களை தொடங்கினார்

-ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது!

-ஜெயலலிதாவுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கிறது என்று பார்க்கிறேன் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளார் சு.சாமி

-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்னும் சிறிது நேரத்தில் விசாரணை

-சென்னையில் பேய் மழை - ஜெ.வுக்கு ஜாமீன் கொடுத்தாலும் அதிமுகவினர் பட்டாசு வெடிக்க முடியாத நிலை!

-ஜெயலலிதா ஜாமீன் மனு 65வது வழக்காக விசாரணைக்கு வருகிறது

-உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது 50வது வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது

-அஇஅதிமுக 43 வது ஆண்டுவிழா கொண்டாட்டம் தொடங்கியது

-தலைமைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் அவைத்தலைவர் மதுசூதனன்

-கொடியேற்றி ஆண்டுவிழா மலரை மதுசூதனன் வெளியிட அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்

-புதுச்சேரி தலைமைக்கழக அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

-ஜெயா டிவி நியூஸில் முழுக்க முழுக்க பிரார்த்தனை செய்திகள்

-கன்னியாகுமரி: அதிமுகவினர் மெழுகுவற்றி ஏற்றி வழிபாடு

-உதகை:108 மூலிகைகளைக் கொண்டு சத்ரு சம்ஹாரா யாகம் நடைபெற்றது.

-ஆசியர்கள் சங்கம் சார்பில் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

-ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் வீடுகளில் விளக்கேற்றி கூட்டு பிராத்தனை

-திருச்சி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

-மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

-பழங்காநத்தம் முத்துமாரியம்மன் கோவிலில்

-திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் 100008 வடைமாலை சாற்றி வழிபாடு

-கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை

-காட்டுபாவா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

-ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையின்போது சு.சாமி தனது நிலையை கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்க வாய்ப்பு

-திருச்சி : மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

-நெல்லை: கேடிசி பள்ளிவாசலில் இன்று சிறப்பு தொழுகை

-திருப்பூர்: ஐயப்பன் கோவிலில் 1008 நெய்விளக்கு ஏற்றி வழிபாடு

-ஜெயலலிதா ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று வருவதை ஒட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு பிரார்தனை

-திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 108 பால்குடம்

-கோவை மாநகர் மாவட்டம் சார்பில் சாய்பாபா கோவிலில் தேர் இழுத்து வழிபாடு

-சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்.

-ஜெயலலிதா ஜாமீன் மனு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது

-அதிமுக 43ம் ஆண்டு விழா: இன்று மிக மிக அமைதியாக கொண்டாட்டம்

-ஜெ. ஜாமீன் வழக்கில் பாலி நாரிமன் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல்

-தம்மையும் ஒருதரப்பாக கருதி கருத்து கேட்க கோரி சுப்பிரமணியன் சுவாமியும் மனுத்தாக்கல்

-அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக வழக்கறிஞரும் மனுத்தாக்கல்

-ஜெ. உட்பட 4 பேரின் ஜாமீன் மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிராகரித்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

-ஜெ.வுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்

-4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டது

-சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்

-ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாவாரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரியும்

-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+