விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு.. போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை
விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

ஈரோடு: விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்தால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஈரோடு வில்லரசம்பட்டியில் கோரிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் கொங்கு எம்.ராஜாமணி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள்,பொறுப்பாளர்கள் உயர்மின் கோபுரத்தினால் பாதிப்புள்ளாகும் 15 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கூட்டு இயக்கத்தின் சார்பில் 15 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கபட்டுள்ள 11 திட்டங்களை உயர்மின் கோபுரங்களாக நிறைவேற்றும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதைக் கைவிட்டு சாலையோரங்களில் கேபிள்கள் அமைத்து நிறைவேற்றிட முன்வர வேண்டுமென்றும், தற்போது அமைக்கப்பட்டுள்ள உயர்மின்கோபுரங்களை சம்பந்தப்பட்ட மின் தொடரமைப்பு நிறுவனங்களே அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு மறுப்புத் தெரிவித்தால் விவசாயிகளே அகற்றிக் கொள்ள அனுமதி வழங்கிட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கலந்து கொண்ட தென்னிந்திய நதிகள் விவசாயிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், புற்றுநோய்க்கும், மலட்டுத் தன்மைக்கும் காரணமாக விளங்கும் உயர்மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது என்றார். மேலும் அருகாமை மாநிலங்களைப் போல் சாலையோரத்தில் கேபிள் பதித்துக் கொண்டு செல்ல வேண்டும் அவர் என்று கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் கொங்கு ராஜாமணி கூறுகையில், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், கோரிக்கையை ஏற்க மறுத்தால் தமிழகம் முழுவதும் உயர்மின்கோபுரங்களை அமைத்து வரும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்போவதாக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications