வறட்சி.. ஆனாலும் விவசாயிகளுக்கு கடன் ரத்து இல்லை-பிரணாப்
டெல்லி: இந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை ரத்து செய்யும் திட்டம் ஏதுமில்லை என அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
பருவமழை பொய்த்துவிட்டாதல் இந்த ஆண்டை வறட்சி ஆண்டாக அறிவித்துள்ளது மத்திய அரசு. 9 மாநிலங்களுக்கு இதற்கான நிவாரணப் பணிகளை உடனடியாகத் துவங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மழை இல்லாமல் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு விவசாயிகளுக்கான கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற பேச்சு பலமாக அடிபடத் துவங்கியது.
இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி, நிதித் துறை செயலாளர் அசோக் சாவ்லா உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கடன் ரத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நிச்சயம் கடன்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. பருவமழை குறைந்து விட்டதால் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று தற்போது கூறுவது கடினம். போகப் போகத்தான் தெரியும்.
மேலும் போன வருடம்தான் விவசாயிகளின் கடன்களான ரூ.71000 கோடியை அரசு முழுமையாக ரத்து செய்தது. வட்டியைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மேலும் கடன்களை ரத்து செய்ய நிதி அமைப்பு இடம்தராது.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. 6 சதவிகித வளர்ச்சி சாத்தியமே என்றார்.
-
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications