For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

3 மாண-வி-கள் எரிப்-பு சம்-ப-வம்: அதி-மு-க-வி-ன-ருக்-கு ஜா-மீன் இல்-லை

சென்னை:

முன்று மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாககைது செய்யப்பட்ட அ.தி.மு.க.வினர் உட்பட 26 பேரை ஜாமீனில் விடுதலை செய்யசென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.

பொதுமக்களின் உயிரையும், உடைமைகளையும் காப்பதுதான் நீதிமன்றத்தின் முதல்கடைமை. குற்றத்தின் கடுமை கருதி இவர்களை ஜாமீனில் விட முடியாது.இச்சம்பவத்தில் இவர்களுக்கு பங்கு இருக்கிறாதா இல்லையா என்பதை விசாரிக்கவேண்டியிருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி முருகேசன்தீர்ப்பளித்தார்.

கடந்த 2.2.2000 அன்று கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவுக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்புகூறியது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.கவினர் -போ-ராட்-டம் நடத்தினர்.

தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த வேளாண்கல்லூரி பஸ்சுக்-கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இச்சம்பவத்தில் கோவைவேளாண் மாணவிகள் மூவர் உ.யிரோடு எரிந்தனர்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.கவினர் உள்பட 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களில் 26 பேர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னைநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதி முருகேசன் விசாரித்துஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X