வேளாண் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்த விவசாயிகள்... நிதி அமைச்சர் உரையில் இடம்பெறாத அறிவிப்புகள்
சென்னை: விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்ட நிலையில் விவசாய கடன் தள்ளுபடி பற்றி எதுவும் இடம்பெறாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சுயசார்பு இந்தியா பொருளாதார தொகுப்பை கடந்த 3 நாட்களாக வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொழில் நிறுவனங்கள், வங்கிகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்து நேற்றும் நேற்று முன் தினமும் உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றி அறிவித்தார்.

விவசாய கடன் தள்ளுபடி பற்றியோ அல்லது விவசாய கடனுக்கான வட்டி தள்ளுபடி பற்றியோ இன்று நிதி அமைச்சரின் உரையில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது விவசாய பெருங்குடி மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இதனிடையே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்க தலைவர் தெய்வசிகாமணி, மத்திய அமைச்சரின் அறிவிப்புகள் அனைத்தும் தற்போதைய சூழலுக்கு பயன் தராத வகையில் உள்ளதாக கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகளுக்கு மற்றொரு விவசாய சங்க தலைவரான பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தொலைநோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். விவசாயத் துறை சார்ந்த திட்டங்களை தாம் முழுமையாக வரவேற்பதாகவும், விவசாய கடன் தள்ளுபடி, புதிய கடன் தொடர்புடைய அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடியை தவிர கால்நடை, தேனீ வளர்ப்பு, விரைவில் அழியும் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சலுகைகள், அத்தியாவசிய பொருள் சட்டத்தில் திருத்தம், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க சட்டம் என எண்ணற்ற விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகள் நிதி அமைச்சரின் உரையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications