வேளாண் அதிகாரி தற்கொலை: அக்ரியைத் தொடர்ந்து மேலும் 5 அதிமுகவினருக்கு சிக்கல்?
சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல்லையில் வேளாண் செயற்பொறியாளராக பணிபுரிந்த முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

வேளாண் துறையில் 7 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதில் நேர்மையாக செயல்பட்டதால் அந்த துறையில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளர்கள் மற்றும் நெல்லையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களின் நெருக்கல்களே தற்கொலைக்கு காரணம் என்று புகார் எழுந்தது.
முத்துக்குமாரசாமி வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சி பொறுப்பில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், வேளாண் பொறியியல் துறை தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 10 பேரும் கைது செய்யப்பட உள்ளனர். வேளாண்துறையில் பணியாற்றும் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் போலீஸ் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த அதிமுகவினர் 5 பேர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்லையைவிட்டு அவர்கள் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications