தமிழகத்தில் இன்று
மாணவி எரிப்பு வழக்கு: குற்றவாளிகள் 29 பேரின் காவல் நீட்டிப்பு
கோயம்பத்தூர்:
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பஸ் எரிப்புச் சம்பவ வழக்கில் கைதான 29 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் செவ்வாய்க்கிழமை தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட் குணவதி இவர்களின் காவலை நீடித்து உத்தரவிட்டார்.
குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் சாவு
கோவை:
கோவை மாநகராட்சி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் இறந்தார்.
பெரியகுயிலி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. கட்டடத் தொழிலாளி. இவரது மனைைவி ஈஸ்வரி (26). இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புபிரசவம் நடந்தது. அதன் பின்னர் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை மாநகராட்சி மருத்துவமனையில் நடந்தது.
இதன் பின்னர் அவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications