மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
"நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் வேளாண்மைக் கொள்கை அறிவிக்கப்படும்
பாட்னா:
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புதிய வேளாண்மைக் கொள்கை நாடாளுமன்றத்தின் மழைக்காலத் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என்று மத்தியவேளாண்துறை அமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதிய வேளாண்மைக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டு, அது குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு அனுப்பி அதன்பிறகு திட்டக் கமிஷனுக்கு அனுப்பி அனுமதி பெறப்பட்டுவிட்டது.
அடுத்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் புதிய வேளாண்மைக் கொள்கை அறிவிக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பு நிலையிலேயே இருந்த வேளாண்மைக் கொள்கை தற்போது அறிவிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. உணவு உற்பத்தியில் 4சதவீத வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு, உபரி உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டுபல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புதிய வேளாண் கொள்கை தீட்டப்பட்டுள்ளது என்றார் நிதிஷ் குமார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications