தமிழகத்தில் இன்று
புது தில்லி:
இந்தியாவிலேயே அரிசி உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதுவரைமுதலிடத்தில் இருந்த பஞ்சாபை தமிழகம் தற்போது முந்தியுள்ளது.
அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஆஃப் இந்தியாவெளியிட்டுள்ள அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தியில் முதலிடத்தைப் பஞ்சாப் இழந்தாலும், கோதுமை உற்பத்தியில் அம்மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
உற்பத்தி அளவில் ஹெக்டேருக்கு 3443 கிலோ அரிசி, 134156 கிலோ கரும்பு, 1579கிலோ எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்து தேசிய அளவில் தமிழகம் முதலிடம்பெற்றுள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் ஹரியானா, ஒரிஸாமாநிலங்களைத் தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
கோதுமை உற்பத்தியைப் பொறுத்தவரை பஞ்சாப் மாநிலம், ஒரு ஹெக்டேருக்கு 4332கிலோ உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. பருத்தி உற்பத்தியில் குஜராத் மாநிலம்ஹெக்டேருக்கு 416 கிலோ உற்பத்தி செய்தி முதலிடம் பெற்றுள்ளது.
பருப்பு வகைகளைப் பொறுத்தவரை ஒரு ஹெக்டேருக்கு 835 கிலோ உற்பத்தி செய்துஉத்திரப்பிரதேச மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications