கொங்கு முன்னேற்ற பேரவை-தேர்தல் அறிக்கை
கோவை: கொங்கு முன்னேற்றப் பேரவையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டார்.
கோவை சூலூரில் கொங்கு முன்னேற்றப் பேரவையின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை மற்றும் சி.டிக்களை அக் கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டார். அதை தொடர்ந்து ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டியிடும். இதற்கான வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். கூட்டணி அமைப்பது தொடர்பாக மற்ற கட்சிகள் பேச முன் வந்தால் பரிசீலனை செய்யப்படும் என்றார்.
தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு, வேளாண்மைக்கு தனி டி.வி. சேனல் ஆரம்பித்து, விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சாயக்கழிவு நீர் திட்டத்தை செயல்படுத்த வற்புறுத்தப்படுவதோடு, கறிக்கோழி தொழில் வளர்ச்சியடைய தேவையான திட்டங்களும், திருச்செங்கோடு, நாமக்கல் பகுதிகளில் முட்டை பதப்படுத்தும் நிலையம், தீவன மூலப்பொருள் மையம் மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications