கரை புரண்டோடும் காவிரி-மேட்டூரில் மீண்டும் மின் உற்பத்தி
மேட்டூர்: இந்த ஆண்டு பருவமழை துவக்கத்திலேயே காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
கர்நாடகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தற்போது சுமார் 40,000 கன அடி அளவு நீர் பெருக்கெடுத்து வந்து கொண்டுள்ளது தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு.
இதைத் தொடர்ந்து கரையோர மாவட்டங்களில் விவசாயப் பணிகள் சூடு பிடிக்கத் துவங்கிவிட்டன. அதேபோல மேட்டூரில் மின் உற்பத்திப் பணிகளும் மீண்டும் துவங்கியுள்ளன. இதனால் தற்போது அமலில் உள்ள தற்காலிக மின்வெட்டு விரைவில் நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று முதல் மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் முழுமையாக வேலைக்குத் திரும்புகிறார்கள். மீண்டும் உற்பத்தி வேலைகள் ஆரம்பமாகின்றன. இன்னும் சில தினங்களில் மின் உற்பத்தி சீரான நிலைக்கு வந்துவிடும், என்கிறார் மேட்டூர் மின்நிலைய அதிகாரி விஸ்வநாதன்.
இன்றும் காவிரியில் நீர் வரத்து மிக அதிகமாக உள்ளதால் விரைவிலேயே மேட்டூர் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications