வேளாண் மண்டல அறிவிப்பு... சட்டமாக இயற்ற முதல்வர் தீவிர ஆலோசனை
Recommended Video
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை சட்டமாக இயற்றுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாளை மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முக்கிய முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நாளை மறுதினம் வியாழக்கிழமை அன்று வேளாண் மண்டலம் சட்டம் இயற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் அரசுக்கு நற்பெயர் ஏற்படுவதோடு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க முடியும் என்பது முதல்வரின் நம்பிக்கையாக உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வரவேற்பை பெற்றது. திமுக, மதிமுக மட்டும் முதல்வரை பாராட்டவில்லை, முதல்வரின் அறிவிப்பு கானல் நீராகிவிடக்கூடாது என அந்த இரண்டு கட்சிகளின் தலைமையும் கூறியும். காங்கிரஸ் சார்பில் கூட முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து நன்றி கூறியதோடு, இதனை சட்டமாக கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைத்தனர்.
திமுகவும் இதே கோரிக்கையை தான் முதல்வர் அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து வைத்து வருகிறது. தேர்தலை மனதில் வைத்து டெல்டா மாவட்ட விவசாயிகளை முதல்வர் ஏமாற்றி நாடகம் ஆடி வருவதாக ஸ்டாலின் அனைத்து மேடைகளிலும் சாடினார். முதலமைச்சருக்கு உண்மையிலேயே டெல்டா விவசாயிகள் மீது அக்கறையிருந்தால் வேளாண் மண்டலம் சட்டம் கொண்டு வந்து அதை மத்திய அரசு ஒப்புதல் பெற்று உடனடியாக அதை நடைமுறை படுத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.
ஏற்கனவே குடியுரிமை சட்டம் விவகாரத்தில் இஸ்லாமியர்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள தமிழக அரசு, வேளாண் மண்டலம் விவகாரத்திலும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என அமைச்சர்கள் சிலர் முதல்வருக்கு எடுத்துக்கூறியுள்ளனர். இதையடுத்து நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வேளாண் மண்டலம் சட்டம் இயற்றுவது பற்றி முதல்வர் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சூழலில் நாளை அமைச்சரவை கூட்டமும் நடக்க உள்ளதால் அதில் வேளாண் மண்டலம் சட்டம் தொடர்பாக முக்கிய முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications