வேலையில்லா திண்டாட்டம்.! இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும்.. விஞ்ஞானி அழைப்பு
சேலம்: நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க 70 சதவீத இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும் என, விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் கூறியுள்ளார்.
சேலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்க மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான பரசுராமன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் வேளாண் பொருட்கள் உற்பத்தியை பெருக்க, விஞ்ஞானத்துறையின் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு சேலம் சோனா கல்வி குழுமத்தடன் இணைந்து, விவசாய தொழிலில் பெண்களின் பங்களிப்பை ஏற்படுத்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மேற்கொள்கிறது.
வருங்காலத்தில் விவசாய தொழிலில் கிடைக்கும் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தற்போது நாடு முழுவதும் வாழும் மக்களில், 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது. அவர்களில் 70 சதவீத இளைஞர்களை வேளாண் தொழிலுக்கு கொண்டு வர வேண்டும்.
அப்போது தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படாது. இளைஞர்களை விவசாய தொழிலில் ஈடுபட வைக்க வேண்டுமெனில், விவசாய விளைபொருட்களின் விளைச்சலை லாபகரமாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.
ஆண்களை போல பெண்களையும் காய்கறி உள்ளிட்ட உணவுபொருட்கள் உற்பத்தி துறையில் ஈடுபடுத்த வேண்டும். செல்போன் மூலம் விவசாயத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் விவசாய துறையில் பெண்கள் அதிகளவில் ஈடுபட முன்வருவார்கள் என குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில் மழைப்பொழிவு பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, விவசாயத்தில் பயிர் விளைச்சலை பெருக்குதல், காய்கறி மற்றும் தானியங்கள் உற்பத்தி போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் மாநிலம் முழுவதுமிலிருந்து வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் கள வல்லுநர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications