ஆர்எஸ்எஸ் தலைவர் பயணித்த ரயில் பெட்டியில் கல்வீச்சு.. உடைந்து சிதறிய கண்ணாடி.. 2 பேர் அதிரடி கைது
லக்னோ: பாஜகவின் தாய் அமைப்பாக இருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் பெட்டியில் கல்வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக மோகன் பாகவத் உள்ளார். இந்நிலையில் தான் மோகன் பாகவத் 'ஸ்வர்ணா சதாப்தி' எக்ஸ்பிரஸ் ரயிலில் இ -1 எனும் 'ஏசி' பெட்டியில் டெல்லி நோக்கி பயணம் செய்தார்.

இந்த ரயில் உத்தர பிரதேச மாநிலம் பிரோஜபாத் மாவட்டத்தின் பிரோஜாபாத் - துண்ட்லா பிரிவில் பெமேஷ்வர் கேட் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அவர் பயணித்த ரயில் பெட்டியின் மீது திடீரென்று கல்வீசி தாக்கப்பட்டது. இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. மோகன் பாகவத் அந்த இருக்கையில் இல்லாததால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அதேபோல் பிற பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்தனர். இதுபற்றி உடனடியாக ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தை சுற்றி இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 பேர் சேர்ந்து கல்வீசியது தெரியவந்தது. அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
இதுபற்றி ரயில்வே சிபிஆர்ஓ சசிகாந்த் ஸ்ரீபதி கூறுகையில், ''இ-1 ரயில் பெட்டியில் சீட் 39, 40 மோகன் பாகவத் பயணம் செய்தார். சீட் நம்பர் 51ன் அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி மீது கல்வீசப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications