மேற்கு வங்கத்தில் நாளை மறுவாக்குப்பதிவு.. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்.. என்ன காரணம்?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்த 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் அங்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளன.

இதில் 152 சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதன்பிறகு 2வது கட்டமாக நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) 149 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாக்ரஹட் மேற்கு மற்றும் டைமண்ட் ஹார்பர் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து, மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
அதன்படி இந்த 2 தொகுதிகளுக்கு உட்பட்ட 11 வாக்குச்சாவடி மையங்களுக்கு நாளை (மே 2) மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மறுவாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications